தனியார் துறை நிறுவனங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் ஓரளவு தளர்வுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, சவூதி முழுவதும் பல்வேறு நகரங்களில் M / s VFS குளோபல் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா விண்ணப்ப மையங்கள் வரும் ஜூன் 3 புதன் கிழமை முதல் பாஸ்போர்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா விண்ணப்ப மையங்களின் செயல்பாட்டு நேரம் மற்றும் செயல்படும் நாட்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
நகரம் | முகவரி | நேரம் மற்றும் நாட்கள் | தேதி |
ஜித்தா –ஹைல் தெரு | ரியாடா கட்டிடத்திற்கு எதிரே, பமரூஃப் பெட்ரோல் நிலையத்திற்கு அருகில், ஜித்தா | காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை
(சனிக்கிழமை முதல் வியாழன் வரை) |
3 ஜூன் முதல் |
அபா | கிங் சவுத் தெரு, காமிஸ் முஷாய்ட் | காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை
(சனிக்கிழமை முதல் வியாழன் வரை) |
7 ஜூன் முதல் |
தபூக் | அபு பக்கர் சித்திக் மசூதிக்கு அருகில், தபூக் | காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை (சனிக்கிழமை முதல் வியாழன் வரை) |
7 ஜூன் முதல் |
யான்பு | கடை எண். 3 ஹிகி மையம், கிங் அப்துல்அஜிஸ் தெரு, யான்பு | காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை
(சனிக்கிழமை முதல் வியாழன் வரை) |
7 ஜூன் முதல் |
விண்ணப்பதாரர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக எல்லா நேரங்களிலும் கூட்டத்தைத் தவிர்ப்பது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அனைத்து விண்ணப்பதாரர்களும் அதனை கவனமாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பாஸ்போர்ட் தொடர்பான அல்லது சான்றளிப்பு சேவைகளுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன் அனுமதி பெற்றிருப்பது கட்டாயமாகும்.
[email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ அல்லது கால் சென்டர் (தொலைபேசி எண் 920006139) அழைப்பதன் மூலமாகவோ முன் அனுமதி பெற முடியும்.
விண்ணப்பதாரரைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே முன் அனுமதி பெற்ற விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கென வழங்கப்பட்ட முன் அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் மையத்திற்கு வருகை தர வேண்டும்.
முககவசம் இல்லாத எந்தவொரு விண்ணப்பதாரரும் மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சவூதி அதிகாரிகள் வழங்கிய அனைத்து சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றி பாஸ்போர்ட் சேவை மையங்களில் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒரே சமயத்தில் சேவையாற்றுவது கடினம் என்பதால் ஏற்கனவே காலாவதியான பாஸ்போர்ட்கள் அல்லது விரைவில் காலாவதியாக இருக்கும் பாஸ்போர்ட்கள், அவசர பயண தேவை உள்ளவர்கள் மற்றும் இகாமா(iqama) புதுப்பிக்க வேண்டியவர்களுக்கு முன் அனுமதியில் முன்னுரிமை வழங்கப்படும்.
அதே நேரத்தில் முன் அனுமதி தேவைப்படுபவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தற்போது நடைமுறையில் இருக்கும் சூழ்நிலைகளில் உடனடியாக பரிசீலிக்க முடியாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடல்நலம் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை பொதுமக்கள் மீறும் பட்சத்தில் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய அனைத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதோடு, எல்லா நேரங்களிலும் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பதாரரின் உடல் வெப்பநிலை பாஸ்போர்ட் மையத்திற்கு நுழைவதற்கு முன் சரிபார்க்கப்படும். ஆகவே கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் மையத்திற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Public notice regarding resumption of Consular services at various locations under the consular jurisdiction of CGI Jeddah from June 3rd & 7th onwards. Kindly adhere to the instructions mentioned in the Advisory. pic.twitter.com/59OhLLiu6R
— India in Jeddah (@CGIJeddah) May 28, 2020